/* */

சொத்து வரி ரசீதுக்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் உட்பட 2 பேர் கைது

பூமலைக்குண்டு ஊராட்சியில், சொத்து வரி ரசீது வழங்க லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் உட்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சொத்து வரி ரசீதுக்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் உட்பட 2 பேர் கைது
X

பைல் படம்.

தேனி தர்மாபுரியை சேர்ந்தவர் அருள்குமார் 26. கோழிப்பண்ணை உரிமையாளரான இவர் பூமலைக்குண்டு கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் 3.5 ஏக்கரில் கோழிப்பண்ணை அமைத்தார். அங்கு கட்டடம் கட்டினார். மின் இணைப்பு பெற ஊராட்சி நிர்வாகத்திடம் சொத்து வரி ரசீது கேட்டார். ஊராட்சி செயலாளர் செந்தில் ஆண்டவர் 37, ஊராட்சி தலைவியின் கணவர் முருகன் ஆகியோர் 17 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டனர்.

இது பற்றி தேனி லஞ்ச ஒழிப்பு போலீசில் அருள்குமார் புகார் செய்தார். போலீசார் 12 ஆயிரம் ரூபாய் வேதிப்பொருள் தடவிய நோட்டினை கொடுத்து லஞ்சம் கொடுக்குமாறு அருள்குமாரிடம் அறிவுறுத்தினர். அருள்குமார் இந்த பணத்தை முருகனிடம் கொடுத்தார். அப்போது போலீசார் கைது செய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் செந்தில் ஆண்டவருக்கும் பங்கு இருப்பது தெரிந்ததால், முருகனையும், செந்தில் ஆண்டவரையும் கைது செய்தனர். மேலும் சிலரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் செந்தில் ஆண்டவரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் முரளீதரன் உத்தரவிட்டார்.

Updated On: 14 April 2022 5:09 AM GMT

Related News

Latest News

  1. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  2. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  3. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  5. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  6. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  7. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  9. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  10. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...