/* */

மனிதநேயத்தின் உச்சம்...இப்படியும் ஒரு கவிஞர்...

கா.மு.ஷெரீப்.....இந்தக் கவிஞரின் பெயரை , நம்மில் ஒரு சிலர் மட்டுமே கேள்விப்பட்டிருப்போம்

HIGHLIGHTS

மனிதநேயத்தின் உச்சம்...இப்படியும் ஒரு கவிஞர்...
X

இதயம் தொட்ட கவிஞர் ஷெரீப்.

சமூக வலைதளத்தில் உலாவந்து கொண்டிருக்கும் மனதை உருக்கும் பதிவு. இன்ஸ்டா நியூஸ் வாசகர்களுக்காக....

கவிஞர் கா.மு.ஷெரீப் எழுதிய ஒரு திரைப் படப் பாடலை, நம்மில் பலரும் கேட்டு மகிழ்ந்திருப்போம் ..!அந்தப் பாடல்: "ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே…!" ஆம்...இப்படி ஒரு சில தேர்தெடுத்த திரைப்படப் பாடல்களை மட்டுமே எழுதி இருக்கிறார் கா.மு.ஷெரீப் ! சுமார் இருபது வருடங்களுக்கு முன் மறைந்து விட்ட கா.மு.ஷெரீப் குறித்து, சில இனிய நினைவுகளை சமீபத்தில் தற்செயலாக படிக்க நேர்ந்தது .

சொன்னவர் வீரபாண்டியன் ! இதோ , வீரபாண்டியன் சொன்ன சில விஷயங்கள் : ."இளமையின் கோளாறால், வழிதவறிப் போய் கருவுற்றுக் கலங்கினாள் மணமாகாத ஓர் இந்துப் பெண் ; காதலன் கைவிட்டு விட்டான். பெண்ணின் தகப்பனார் கவிஞர் கா.மு.ஷெரீப்பின் நேசத்துக்குரிய நண்பர். இவரிடம் வந்து சொல்லி நொந்தழுதார். "குடும்ப மானம் கப்பலேறிவிடும்!" என்று குமைந்தார். " வேறு வழியில்லை. கருவைக் கலைக்க மருத்துவச்சி உதவியை நாட இருக்கிறேன் " என்று கதறினார்.

ஷெரீப் என்ன சொன்னார் தெரியுமா ? "உண்டான உயிரை அழிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. கருவைக் கலைப்பதை எங்கள் மார்க்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், உருவான அந்தக் கருவைக் காக்கும் பொறுப்பை கடவுள் கடமையாக்கியிருக்கிறான். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று சொல்லி , தன் மனைவியையும் கருவுற்ற அந்தப் பெண்ணையும் லெட்சுமாங்குடிக்குப் பக்கத்திலிலிருக்கும் வேலுக்குடி என்னும் தன் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்தார். குழந்தை பிறந்ததும், அந்தப் பெண்ணைச் சத்தமின்றி அவளுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பிறந்த அந்தக் குழந்தையைத் தன் மனைவி ஈன்ற மகவாகக் கூறி வளர்த்து ஆளாக்கினார்.

.அப்போது, "இந்த வயதிலும் உனக்குக் குழந்தை தேவையா?' என ஏகடியம் புரிந்தவர்களின் வசையையும் மௌனமாக ஏற்றுக்கொண்டார்." நெகிழ்ந்து போனேன். வீரபாண்டியன் சொன்னதைப் படித்து விட்டு ! இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும்,பிற சமயத்தாரையும் மதித்துப் போற்றக்கூடிய பக்குவமான அன்பு இதயம் கொண்டவராக, அன்னை மனம் கொண்டவராக இருந்திருக்கிறார் கா.மு.ஷெரீப்.

"அன்னையைப் போலொரு தெய்வமில்லை- அவள் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை.". இதுவும் கா. மு. ஷெரீப் எழுதிய பாடல்தான் ..! .அந்தப் பாடலில் கா. மு. ஷெரீப் எழுதியிருப்பார் :

"துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே – நம்மை சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்" இந்த வார்த்தைகள் அன்னைக்கு மட்டும் அல்ல..! மதம் தாண்டி மனித நேயம் கொண்ட கா. மு. ஷெரிப் போன்ற அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் பொருந்தும் ! பணம் பந்தியிலே குணம் குப்பையிலே', இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம்.

'சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?' – இந்த வரிகளைக் கேட்கும்போது மெய் மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம்.' ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா?', 'ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே' ஆகிய பாடல்கள் எந்தத் திரைப்படத்தில், யார் எழுதியது என்று 'குவிஸ்' நடத்தாமல் ரசிக்கிறோம்.

இதுபோன்ற திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் கவி.கா.மு.ஷெரீப் என்று அறியும்போது, அவரை நாம் மறந்து விட்டோமே என்ற வேதனையும் எழுகிறது.

Updated On: 27 Dec 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  2. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  3. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  4. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  9. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  10. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்