Begin typing your search above and press return to search.
கம்பம் அருகே 1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்: அண்ணன்- தம்பி கைது
கம்பம் அ ருகே பதுக்கி வைக்கப்பட்ட 1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அண்ணன்,தம்பி கைது செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
கம்பம் குமுளி சாலையோரம் நகராட்சி குப்பை கிடங்கு அருகே உள்ள குடோனை கம்பம், கூடலுார் போலீசார் இணைந்து சோதனை செய்தனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் எடையுள்ள 132 புகையிலை மற்றும் பான்பராக் மூடைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 16 லட்சம் ரூபாய் ஆகும். புகையிலை பதுக்கி வைத்திருந்ததாக கம்பம் பாரதியார் நகரை சேர்ந்த சதீஷ்(வயது 35, )அவரது அண்ணன் வேலவன், (38 )ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.