/* */

எச்சரிக்கைகளை மீறி ஆற்றில் குளிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள்

போலீஸ், தீயணைப்புத்துறை பலமுறை அறிவுறுத்தியும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இதனை கண்டுகொள்ளாமல் குளித்து வருகின்றனர்

HIGHLIGHTS

எச்சரிக்கைகளை மீறி ஆற்றில் குளிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள்
X

பைல் படம்

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளதால் குளிக்க வேண்டாம் என போலீஸ், தீயணைப்புத்துறை பலமுறை அறிவுறுத்தியும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இதனை கண்டுகொள்ளாமல் ஆபத்தான முறையில் குளித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் சுருளியாறு, முல்லை பெரியாறு, வைகை ஆறு, கொட்டகுடி ஆறு, வராகநதிகளில் பெரும் அளவி்ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் குளிக்க வேண்டாம், துணிகளை துவைக்க வேண்டாம், வாகனங்களை கழுவ வேண்டாம், செல்பி எடுக்க வேண்டாம் என மாவட்ட போலீஸ் நிர்வாகமும், தீயணைப்புத்துறையும் பலமுறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பள்ளி கல்லுாரி மாணவர்கள் பலர் கண்டுகொள்ளவில்லை.

தேனியில் சடையாள்கோயில், பழனிசெட்டிபட்டி வாட்டர் டேங்க், வீரபாண்டி முல்லையாறு, குன்னுார் வைகை ஆறு ஆகிய இடங்களில் ஆற்றுக்குள் இறங்கி ஆபத்தான முறையில் நீரில் குளிக்கின்றனர். சிலர் மது அருந்தி விட்டும், கஞ்சா புகைத்து விட்டும் நிதானம் இழந்த நிலையில் நீரில் குளிக்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது என்பது தெரிந்தும் இவர்கள் இப்படி குளிப்பதால் என்ன செய்வது என்பது தெரியாமல் போலீஸ், தீயணைப்புத்துறையினர் தவித்து வருகின்றன. இவர்களுக்கு மது, கஞ்சா கள்ள மார்க்கெட்டில் கிடைக்காமல் தடுத்து விட்டாலே, எழுபது சதவீதம் பிரச்னைகள் சரியாகி விடும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Updated On: 13 Dec 2023 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது