/* */

சின்னமனுார் அருகே சினிமா பாணியில் நாடகம் நடத்தி நகைகளை மீட்ட போலீசார்

சின்னமனுார் அருகே மார்க்கையன்கோட்டையில் திருடு போன நகைகளை போலீசார் சினிமா பாணியில் நாடகம் நடத்தி மீட்டனர்.

HIGHLIGHTS

சின்னமனுார் அருகே சினிமா பாணியில் நாடகம் நடத்தி நகைகளை மீட்ட போலீசார்
X

பைல் படம்.

திருவண்ணாமலை வந்தவாசியை சேர்ந்தவர் ரெஜினா, 13. இவர் சின்னமனுார் மார்க்கையன்கோட்டையில் நடக்கும் திருவிழாவிற்கு வந்திருந்தார். இதற்காக தனது தாய் வீட்டிற்கு வந்திருந்த ரெஜினா தான் அணிந்திருந்த 12 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை வீட்டில் வைத்து விட்டு திருவிழா காண சென்றார். திரும்ப வந்து பார்த்து போது பணம், நகைகளை காணவில்லை.

இது குறித்து சின்னமனுார் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார் அந்த காலனியை சேர்ந்தவர்கள் தான் திருடியிருக்க வேண்டும். வேறு நபர்கள் திருடவில்லை என்பதை அறிந்தனர். உடனே காலனி மக்களை ஒன்று திரட்டி, போலீஸ் மோப்ப நாய் இங்கு வரப்போகிறது. வந்தால் திருடியவர்களை கண்டு பிடித்து விடும். எனவே அதற்கு முன்னர் ஒரு வாய்ப்பு தருகிறோம். ஒரு அண்டாவில் தண்ணீர் நிரப்பி விடுகிறோம். நீங்கள் திருடிய நகையினை அந்த அண்டாவிற்குள் போட்டு விடுங்கள். திருடியவரின் கை ரேகையும் பதியாது. இல்லாவிட்டால் அத்தனை பேரின் கை ரேகையும் சேகரித்து நடவடிக்கை எடுப்போம் என அறிவித்தனர்.

அதேபோல் அண்டாவும் வைக்கப்பட்டது. அண்டாவிற்குள் 20 பேர் வந்து கைகளை விட்டு அலம்பி விட்டு சென்றனர். போலீசார் சோதித்த போது அதற்குள் திருடு போன நகைகள் இருந்தன. பணம் மட்டும் கிடைக்கவில்லை. நகைகளை மீட்ட போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர். பணம் திருடியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். நகைகள் மீட்கப்பட்டாலும், திருடியவர்கள் கண்டறியப்பட்டு சட்டரீதியான நடவடிக்கைகளை தொடரப்போவதாக போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 9 April 2022 3:18 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?