/* */

ஆட்டத்தை துவக்கிய ஓபிஎஸ்..எடப்பாடி டீமில் புதிய கலக்கம் !

ஓ.பி.எஸ். அடுத்தடுத்து எடுத்து வரும் நடவடிக்கைகளால் எடப்பாடி அணி கலக்கத்தில் உள்ளது.

HIGHLIGHTS

ஆட்டத்தை துவக்கிய ஓபிஎஸ்..எடப்பாடி டீமில் புதிய கலக்கம் !
X

பைல் படம்

தமிழக அரசியலில் தனக்கு பிறகு 100 ஆண்டுகளுக்கு மேலாக, அதிமுக இருக்கும் என சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

ஆனால் ஜெயலலிதா மறைந்த ஓராண்டிலேயே அவரது வார்த்தைகளை துவம்சம் செய்யும் வகையில் கோஷ்டி பூசல் உருவானது. ஜெயலலிதாவுக்கு பிறகு அந்த சீட்டில் யார் உட்காருவது? என்பதில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே தொடங்கிய போட்டியும், அதையொட்டிய மோதல் போக்கும் கட்சியை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டன.

இந்த மோதல் விஸ்வரூபம் எடுத்ததால் பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்களை கைக்குள் போட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை முடிசூட்டிக்கொண்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்தே நீக்கினார். இதனால், ஆத்திரம் அடைந்த ஓபிஎஸ் தனக்கு நீதி வழங்க கோரி நீதிமன்றத்தின் கதவுகளை தட்டினார்.

இந்த விவகாரத்தில் கீழமை நீதிமன்றம் ஓபிஎஸ்சுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வெளியானது.

இதனால் ஏகத்துக்கும் குஷியான எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அடுத்தகட்டமாக அதிமுகவில் பல்வேறு மாற்றங்களை செய்து ஓ.பன்னீர்செல்வத்தை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இதற்கு செக் வைக்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஓபிஎஸ் வழக்கை விசாரித்து முடிக்கும் வரை அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை விதித்து அதிரடியாக உத்தரவு போட்டது.

இதனால் அதிர்ச்சியின் உச்சத்துக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அடுத்தக்கட்டமாக என்ன செய்வது? என்று புரியாமல் கடும் குழப்பத்தில் ஆழ்ந்து கிடப்பதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ்சுக்கு பாஜக மேலிடத்தின் ஆதரவு இருப்பதாக சொல்லப்படுவதால் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்று காய்கள் நகர்த்தி பார்த்தும் காரியம் எதுவும் கைகூடாததால் ஏமாற்றத்துடன் திரும்பினார்.தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கொடுத்த ஆவணங்களை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படும் நிலையில், எந்த பலமும் இல்லாத சூழலில் அதிமுக வழக்கில் ஓபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை அறிந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவு அதிமுக தொண்டர்கள் கலங்கிப் போய் கிடக்கின்றனர். ஏற்கெனவே, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானபோது எடப்பாடி பழனிசாமி வட்டாரத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ்சை தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு ஓபிஎஸ், 'இப்போது வர வேண்டாம். நிச்சயமாக எடப்பாடி மேல்முறையீடு செய்வார். நீதிமன்ற வழக்குகள் முடியட்டும். டெல்லி நமக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. நான் சொல்லும்போது வந்தால் போதும்' என தடுத்து வைத்திருந்ததாக அப்போதே பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் பாஜக மேலிடம், தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் என அனைத்து இடங்களிலும் ஓபிஎஸ் கொடி மேலோங்கி உள்ளதாக கூறப்படுவதால், எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மீண்டும் ஓபிஎஸ்சுடன் பேசியதாகவும், அவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் சில சீக்ரட் அசைன்மெண்ட்கள் தந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் அறிந்த எடப்பாடி பழனிசாமி, 'யாரை நம்புவது? யாரை விரட்டுவது?' என புரியாமல், 'நீங்க கடைசி வரை என் கூட இருப்பீங்க தான..?' என்று பலரிடமும் கேட்டு, வருத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பும், கட்சி வட்டாரத்தில் குழப்பமான சூழலும் நிலவி வருவதால் தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Updated On: 9 Oct 2022 10:12 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு