Begin typing your search above and press return to search.
உத்தமபாளையம் அருகே கணவன் மது அருந்தியதால் மனைவி விஷம் குடித்து தற்கொலை
கணவன் மது அருந்தியதால் மனம் உடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
கணவன் மது அருந்தியதால் மனம் உடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
உத்தமபாளையம் அருகே உள்ள கோவிந்தன்பட்டி தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் போதுராஜ், 50. இவரது மனைவி முத்துலட்சுமி, 47. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். போதுராஜ் மது அருந்தும் பழக்கம் உள்ளவர். பல ஆண்டுகளாக மது அருந்துவதை நிறுத்துமாறு முத்துலட்சுமி தனது மனைவியிடம் வலியுறுத்தி உள்ளார்.
ஆனால் போதுராஜ் குடிப்பதை நிறுத்தவில்லை. இதனால் மனம் உடைந்த முத்துலட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.