/* */

பொது மக்களுடன் சென்று தாசில்தாரிடம் மனு கொடுத்த எம்.எல்.ஏ

பெரியகுளம் தாலுகா அலுவலகத்திற்கு பொதுமக்களுடன் நேரில் சென்று எம்.எல்.ஏ. சரவணக்குமார் மனு கொடுத்தார்

HIGHLIGHTS

பொது மக்களுடன் சென்று தாசில்தாரிடம்  மனு கொடுத்த எம்.எல்.ஏ
X

பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் தாலுகா அலுவலகத்திற்கு பொதுமக்களுடன் சென்று மனு கொடுத்தார்.

பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் பொதுமக்களுடன் பெரியகுளம் தாலுகா அலுவலகம் சென்று தாசில்தாரிடம் மனு கொடுத்தார்.

பெரியகுளம் கும்பக்கரை ரோட்டோரம் வசித்து வரும் 90 குடும்பங்களை சேர்ந்த மக்கள் ரோடு விரிவாக்க பணியால் வீடுகளை இழக்கும் நிலையில் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு மாற்று ஏற்பாடாக பெரியகுளம் முருகமலை அடிவாரத்தில் வீட்டி மனை இடங்கள் வழங்க வேண்டும் என பெரியகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணக்குமாரிடம் முறையிட்டனர். உடனே அவர்களை அழைத்துக் கொண்டு, பெரியகுளம் தாலுகா அலுவலகம் சென்றார். அங்கு தாசில்தாரிடம் பொதுமக்களின் கோரிக்கையினை மனுவாக கொடுத்து அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம், தேனி லோக்சபா தொகுதி செயலாளர் தமிழ்வாணன், நிர்வாகிகள் தளபதி, கனிமனோகரன் உட்பட பலர் உடன் சென்றனர்.

Updated On: 15 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  3. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  6. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  7. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  8. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  9. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  10. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...