/* */

கூடலூரில் மழையில் நனைந்த நெல்மூட்டைகள்: விவசாயிகள் போராட்டம்

கூடலூரில் 20 டன் நெல் மூடைகள் மழையில் நனைந்ததை கண்டித்து விவசாயிகள் ரோட்டில் நெல்லை கொட்டி போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

கூடலூரில் மழையில் நனைந்த நெல்மூட்டைகள்: விவசாயிகள் போராட்டம்
X

கூடலுாரில் நெல் மூடையினை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டி விவசாயிகள் போாட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம், கூடலூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய விவசாயிகள் அறுவடை செய்திருந்த 20 டன் நெல் மூடைகளை கொண்டு வந்து குவித்து வைத்திருந்தனர். இயந்திர பற்றாக்குறை காரணமாக அதிகாரிகள் அந்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு மிகுந்த தாமதம் செய்து வந்தனர்.

இந்நிலையில் நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த விவசாயிகளின் நெல், மழையில் நனைந்து சேதமாகியது. அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கும், அலட்சியமும் தான் இதற்கு காரணம் என அதிகாரிகளை கண்டித்து கூடலுார் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், செயலாளர் தெய்வம், பாரதிய கிஷான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ்பாபு, இயற்கை வேளாண் விவசாய சங்க தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நெல்லை கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நெல் கொள்முதலில் தாமதம் செய்வதால் விவசாயிகள் அறுவடை செய்த நெல் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. விவசாயிகள் விளைந்த நெல்லையும் அறுவடை செய்ய முடியாமல் பரிதவித்து வருகின்றனர். வயல்களிலும் விளைந்த நெல் வீணாகிறது என புகார் எழுப்பினர்.

சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, நெல் கொள்முதலுக்கு விரைவான வசதிகள் செய்வதாக உறுதி அளித்தனர்.

Updated On: 25 April 2022 3:17 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!