/* */

மாற்றுத்திட்டம் மூலம் மதுரைக்கு குடிநீர்: மேயரிடம் விவசாயிகள் முறையீடு

லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் மாற்றுத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனக்கோரி விவசாயிகள் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

மாற்றுத்திட்டம் மூலம் மதுரைக்கு குடிநீர்: மேயரிடம் விவசாயிகள் முறையீடு
X

கூடலுார் வந்த மதுரை மேயர் இந்துராணியிடம், லோயர்கேம்ப்பில் இருந்து மாற்றுத்திட்டங்களின் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி, மனு கொடுத்த விவசாயிகள்.

தேனி மாவட்டம், குமுளி அருகே லோயர்கேம்ப்பில், முல்லை பெரியாற்றில் இருந்து மதுரைக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த 1300 கோடி ரூபாய் அரசு ஒதுக்கி உள்ளது. குழாய் மூலம் குடிநீர் கொண்டு சென்றால் தேனி மாவட்டம் பாலைவனமாகி விடும். எனவே இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. மாற்றுத்திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரைமேயர் இந்திராணி தனது உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்க கூடலுார் வந்தார். அவரை முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், செயலாளர் ஜெகன், பொருளாளர் ஜெயபால், துணைத்தலைவர் ராஜா, துணைச் செயலாளர் ரவி, பாரதீயகிஷான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ்பாபு உட்பட விவசாயிகள் சந்தித்து, லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை மாற்று வழிகளின் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

Updated On: 14 March 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது