/* */

நெல்லை அரசு கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யவும் இடைத்தரகர் தேவை

விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த நெல்லை அரசு கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யவும் இடைத்தரகர் தேவை என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.

HIGHLIGHTS

நெல்லை அரசு கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யவும் இடைத்தரகர் தேவை
X

கோப்பு படம் 

இது குறி்த்து விவசாயிகள் கூறியதாவது: விவசாயிகள் விளைவிக்கும் ஒரு கிலோ நெல்லுக்கு அரசு கொள்முதல் மையங்களில் 20 ரூபாய் 60 பைசா விலை தருகின்றனர். நெல் எடை போட்டு ரசீது வாங்கிய மூன்று அல்லது நான்கு நாட்களில் இந்த பணம் விவசாயிகள் வங்கி கணக்கில் ஏறி விடும். ஆனால் நெல்லை கொள்முதல் மையங்களில் விற்பனை செய்வது அவ்வளவு சுலபம் அல்ல. கட்டாயம் ஒரு இடைத்தரகர் தேவைப்படுகிறார்.

கூடலுார் அரசு நெல் கொள்முதல் மையத்திற்கு, ஒரு ஓய்வு பெற்ற விவசாயத்துறை அதிகாரியே இடைத்தரகராக செயல்படுகிறார். இவர் விவசாயிகளிடம் நெல் குறைந்த விலைக்கு வாங்கி அரசு மையத்தில் அதிக விலைக்கு விற்கிறார். இவருக்கு அத்தனை அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். தவிர ஒரு நெல் மூடைக்கு 60 ரூபாய் கமிஷன் கேட்கின்றனர். கேட்டால் லோடுமேன் கமிஷன் என கூறுகின்றனர்.

விவசாயிகள் இதனால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த விஷயம் குறித்து கலெக்டர் முரளீதரன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் இடைத்தரகாக செயல்படும் எந்த ஓய்வு பெற்ற விவசாயத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

விவசாயிகள் வயிற்றில் அடித்து பிழைக்கும் இது போன்ற இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடலுார் நெல் கொள்முதல் நிலையத்தில் இடைத்தரகராக செயல்படும் அந்த ஓய்வு பெற்ற அதிகாரிக்கு அரசு வழங்கும் பென்சன் பணத்தை நிறுத்தும் வரை விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கூறினர்.

Updated On: 26 April 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!