/* */

உரத்திற்கு அதிக விலை கொடுக்காதீர்கள்: தேனி வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

தேனி மாவட்டத்தில் போதிய அளவு உரம் கையிருப்பு இருப்பதால் விவசாயிகள் அதிக விலை கொடுத்து உரம் வாங்க வேண்டியதில்லை என வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது

HIGHLIGHTS

உரத்திற்கு அதிக விலை கொடுக்காதீர்கள்:   தேனி வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
X

காட்சி படம்

தேனி வேளாண்மை இணை இயக்குனர் அழகுநாகேந்திரன் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் 222 தனியார் உரக்கடைகள், 73 வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

முதல் போக சாகுபடிக்கு தேவையான அளவு உரங்கள் அனைத்து இடங்களிலும் கையிருப்பில் உள்ளது. தற்போதைய நிலையில் 1196 டன் யூரியா, 352 டன் டிஏபி கலப்பு உரம், 465 டன் பொட்டாசியம், 2325 டன் காம்ப்ளக்ஸ் உரம் என மொத்தம் 4,338 டன் உரம் இருப்பு உள்ளது.

இந்த மாதம் கூடுதலாக 2470 டன் உரம் வந்து சேரும். எனவே உரம் போதுமான அளவு உள்ளது.

விவசாயிகள் உரத்திற்காக எங்குமே கூடுதல் விலை கொடுக்க வேண்டாம். அப்படி யாராவது கூடுதல் விலை கேட்டால், 9894947952 என்ற நம்பரில் புகார் செய்யலாம் என கூறியுள்ளார்.

Updated On: 8 Jun 2022 12:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  3. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  6. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  10. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்