Begin typing your search above and press return to search.
பெரியகுளத்தில் வழிப்பறி கும்பல் நடமாட்டம்? இருவரை கைது செய்தது போலீஸ்
பெரியகுளத்தில் வழிப்பறி கும்பல் நடமாட்டம் அதிகம் காணப்படுவதாக எழுந்த புகாரில் இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
HIGHLIGHTS
பெரியகுளம் பைபாஸ்ரோட்டில் வழிப்பறி கும்பல் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. பெரியகுளம் டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையில் போலீசார் இப்பகுதியில் இரவு ரோந்து பணியினை தீவிரப்படுத்தினர்.
ஜெயமங்கலம் எஸ்.ஐ., நாகராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது, மேல்மங்கலத்தை சேர்ந்த நாகபாண்டி, பெரியசாமி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி போன்ற பல ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். வழிப்பறி கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.