Begin typing your search above and press return to search.
தேனி: கொரோனா மரணத்திற்கு இழப்பீடு கேட்டு 824 பேர் விண்ணப்பம்
தேனி மாவட்டத்தில் கொரோனா மரணத்திற்கு இழப்பீடு கேட்டு 824 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.
HIGHLIGHTS
தேனி மாவட்டத்தில் கொரோனா மரணத்திற்கு இழப்பீடு கேட்டு, இதுவரை 824 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் 488 பேருடைய இழப்பிற்கு அரசு நிவாரணம் தலா 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. சிலருக்கு வாரிசு சான்று கிடைப்பதில் இருந்த தடைகளால் நிவாரணம் வழங்கமுடியவில்லை.
கொரோனா பரிசோதனை சான்று, சிகிச்சை ஆவணம், இறப்பு மற்றும் வாரிசு சான்று ஆகியவற்றை தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை பிரிவில் கொடுத்து உரிய நிவாரணம் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.