/* */

18ம் கால்வாய், பி.டி.ஆர்., கால்வாய்களில் நீர் திறப்பு

லோயர் கேம்ப் அருகே உள்ள 18ம் கால்வாயில் ஒரு போக பாசனத்திற்காக தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இன்று தண்ணீரை திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

18ம் கால்வாய், பி.டி.ஆர்., கால்வாய்களில் நீர் திறப்பு
X

கோப்பு படம்

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள 18 ஆம் கால்வாய் தலை மதகில் இருந்து உத்தமபாளையம் மற்றும் போடி பகுதியில் உள்ள மானாவாரி நிலங்கள் பயன்பெறும் வகையில் 44 கண்மாய்களில் தண்ணீரை தேக்கி நிலத்தடிநீர் மூலம் மறைமுகமாக பாசன வசதி பெறுவதற்காகவும், நேரடியாக 4 ஆயிரத்து 614.25 ஏக்கர் விளை நிலங்கள் ஒரு போக பாசன வசதி பெரும் வகையில் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு இன்று தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் இன்று தலைமதகு பகுதியிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி, வட்டாட்சியர் அர்ஜுனன், உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பதினெட்டாம் கால்வாய் விவசாய சங்கத்தினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பி.டி.ஆர்., கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த கால்வாயில் தொடர்ச்சியாக 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் 5150 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 14 Sep 2022 11:51 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா