/* */

வருஷநாடு கிராம ஊராட்சி அலுவலகம் முற்றுகையிட்ட பெண்கள், பரபரப்பு

தேனிமாவட்டம் வருஷநாடு கிராம ஊராட்சி அலுவலகத்தை, நூறு நாள் பணியாளர்கள், பணி நேரம் நீட்டிக்கப்பட்டதை கண்டித்து முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

வருஷநாடு கிராம ஊராட்சி அலுவலகம் முற்றுகையிட்ட பெண்கள், பரபரப்பு
X

தேனி மாவட்டம் வருஷ நாடு ஊராட்சியில் நூறுநாள் வேலை திட்டத்தில் பணி நேரம் குறித்த விவகாரத்தில் பணியாளர்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தேனி மாவட்டம் முழுவதும் நுாறு நாள் வேலை திட்டத்தில் பணி நேர மாறுதல் கொண்டு வரப்பட்டது. இதுவரை காலை ஒன்பது மணிக்கு பணித்தளத்திற்கு வரும் மக்கள், மதியம் இரண்டு மணி வரை வேலை செய்தனர்.

இனிமேல் காலை எட்டு மணிக்கே பணித்தளத்திற்கு வர வேண்டும். மதியம் ஒரு மணி நேரம் ஓய்வு எடுக்கலாம். மாலை ஐந்து மணி வரை வேலை செய்ய வேண்டும் என பணி நேரத்தில் பல்வேறு மாறுதல்களையும் புதிய கட்டுப்பாடுகளையும் அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர்.

தற்போது மாவட்ட நிர்வாகம் கொண்டு வந்துள்ள புதிய திட்டம் எங்களுக்கு கடும் நெருக்கடியினை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி இன்று வேலைக்கு வந்த பொதுமக்கள் வருஷநாடு கிராம ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதிகாரிகள் பொதுமக்களிடம் சமரசம் பேசி, பொதுமக்களின் கருத்துக்களை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் புறப்பட்டு சென்றனர்.

Updated On: 6 Aug 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  5. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  7. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  8. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  9. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  10. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி