/* */

போடி பரமசிவன் கோயில் அடிவாரத்தில் வாழை மரங்கள் வெட்டிச்சாய்ப்பு

போடி பரமசிவன் கோயில் மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் 4500 வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி வீழ்த்தி உள்ளனர்.

HIGHLIGHTS

போடி பரமசிவன் கோயில் அடிவாரத்தில்  வாழை மரங்கள் வெட்டிச்சாய்ப்பு
X
போடியில் வெட்டி வீழ்த்தப்பட்ட வாழை மரங்கள்.

தேனி மாவட்டம், போடி சுப்புராஜ்நகரை சேர்ந்தவர் பாலு. இவர், போடி பரமசிவன் கோயில் மலையடிவாரத்தில் குத்ததைக்கு நிலம் பிடித்து வாழை சாகுபடி செய்திருந்தார். இந்த வாழை மரங்கள் தார் போட்டு வெட்டும் பருவத்தில் வளர்ந்திருந்தன.

நேற்று இரவு, இவரது நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மரங்களில் 4500 மரங்களை யாரோ சிலர் ஒரே நாள் இரவில் வெட்டி சாய்த்து விட்டனர். மீதம் 3500 மரங்களை வெட்டவில்லை. இது குறித்து பாலு போடி தாலுகா போலீசில் புகார் செய்துள்ளார்.

போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீதம் உள்ள வாழை மரங்களை வெட்டி விடாமல் இருக்க, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாழை மரங்களை வெட்டி நாசப்படுத்திய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 20 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...