/* */

துணைமுதல்வர் அலுவலகம் அருகே ஐடி ரெய்டு

துணைமுதல்வர் அலுவலகம் அருகே ஐடி ரெய்டு
X

போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகம் அருகே வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுப்புராஜ் நகர் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு அருகில் வசித்து வருபவர் குறிஞ்சி மணி. தேனி மாவட்ட அம்மா பேரவை பொருளாளராக உள்ள இவரது இல்லத்தில் இன்று காலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மதுரை மண்டல உதவி இயக்குநர் பூவலிங்கம் தலைமையிலான வருமான வரித்துறையினருடன் தேர்தல் பறக்கும் படையினரும் இணைந்து சோதனை நடத்தினர்.

சுமார் மூன்று மணி நேரம் நடத்திய சோதனையில் பணமோ முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றபடவில்லை என சோதனை முடிவில் தெரிய வந்தது. துணை முதல்வர் அலுவலகத்திற்கு அருகே வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் போடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 3 April 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?
  2. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  3. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  4. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  9. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  10. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...