/* */

தற்காப்பு கலை கற்க வேண்டும்: மாணவிகளுக்கு போடி டிஎஸ்பி அறிவுரை

மாணவிகள் தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என போடி டி.எஸ்.பி., அறிவுறுத்தினார்.

HIGHLIGHTS

தற்காப்பு கலை கற்க வேண்டும்: மாணவிகளுக்கு போடி டிஎஸ்பி அறிவுரை
X

போடி பங்கஜம் பள்ளியில் நடந்த பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்கில் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி பேசினார்.

தேனி மாவட்டம், போடி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், போக்சோ விழிப்புணர்வு, பெண்குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில் நடந்தது. இன்ஸ்பெக்டர்கள் ராமலட்சுமி, சரவணன், எஸ்.ஐ., பிரேம் ஆனந்த், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சஜூ உட்பட பலர் பங்கேற்றனர்.

டி.எஸ்.பி., சுரேஷ் பேசுகையில், 'மாணவிகள் மொபைல் போன்களை பயன்படுத்துவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சந்தேகத்திற்கு உரிய நபர்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும். பள்ளி வந்து செல்லும் போதும் கவனமுடன் இருக்க வேண்டும். பள்ளியில் நடக்கும் சம்பவங்களை வீட்டில் பெற்றோர்களிடம் கூற வேண்டும்.

சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்வது மிகவும் நல்லது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும். பாலியல் மற்றும் இதர சட்ட ரீதியான தொல்லைகள் ஏற்பட்டால் போலீசாரை உடனே தொடர்பு கொள்ள வேண்டும்' என்றார்.

Updated On: 15 Dec 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!