Begin typing your search above and press return to search.
தஞ்சை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்
தஞ்சை மாநகராட்சியில் இன்று மூன்று மையங்களில் 300 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
HIGHLIGHTS
தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு மையங்களில், தடுப்பூசியின் கையிருப்பை பொருத்து பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் இன்று, 03 மையங்களில் 300 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாகவும், தடுப்பூசியை கையிருப்பு குறைந்த அளவே இருப்பதால் முதலில் வரும் பொது மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று, தஞ்சை கரந்தை மாநகராட்சி பள்ளியில் 100 கோவிஷீல்டு தடுப்பூசியும், 100 கோவாக்சின் டுப்பூசியும் போடப்படுகிறது. இதேபோல் அண்ணாநகர் பள்ளியில் 100 நபர்களுக்கு என 200 கோவிஷீல்டு மற்றும் 100 கோவாக்ஷீன் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.