/* */

காரை விற்பனை செய்வதாகக்கூறி பணமோசடி செய்தவர் கைது

தஞ்சையில் கார் விற்பனைக்கு தருவதாக கூறி ரூ.5.50 லட்சம் பணத்தை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

காரை விற்பனை செய்வதாகக்கூறி பணமோசடி செய்தவர் கைது
X

தஞ்சையில் கார் விற்பனைக்கு தருவதாக கூறி ரூ.5.50 லட்சம் பணத்தை மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை நடராஜபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் சிங்காரம் (49). இவர் வல்லம் ரோடு, டேவிட் நகர் பகுதியில் சிவாஸ் கார் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தஞ்சை மாதாக்கோட்டை ரோடு, ராஜாளியார் நகர் பால்ராஜ் என்பவரின் மகன் ஞான சவுந்தரராஜிடம் இருந்து கார் வாங்குவதற்காக மூன்று தவணைகளில் ரூ.5.50 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

பின்னர் காருக்குரிய ஆவணங்களை கொடுக்குமாறு கேட்டபோது ஞானசவுந்தரராஜ் மறுப்பு தெரிவித்து தாக்கி மிரட்டல் விடுத்தாராம். மேலும் சிங்காரம் கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து சிங்காரம் அளித்த புகாரின்பேரில் தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசவுந்தரராஜை கைது செய்தனர். இது போல் வேறு யாராவது ஞானசவுந்தரராஜிடம் பணம் கொடுத்து ஏமாந்திருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளார்.

Updated On: 20 April 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்