Begin typing your search above and press return to search.
தஞ்சாவூரில் தொழிலாளர்களின் வீடுகளுக்கே சென்று நிவாரண உதவி வழங்கிய போலீஸ் எஸ்பி
தஞ்சாவூரில் தொழிலாளர்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா நிவாரண உதவிகளை போலீஸ் எஸ்.பி வழங்கினார்.
HIGHLIGHTS
கொரனோ இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று முதல் மே 31-ஆம் தேதி வரை தளர்களற்ற ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் பால், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்றாடம் கூலி களை நம்பி உள்ள தினக்கூலி தொழிலாளர்கள் வேலையின்றி தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர்.
அவர்களுக்கு உதவும் வகையில் காவல் கண்காணிப்பாளர் நிவாரண பொருட்களை வழங்கினார். கீழவாசல் பகுதிகளில் உள்ள ஏழை தொழிலாளர்களின் 500 குடும்பங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் அரிசி எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கினார்.த