/* */

ஜூன்-12 ல் தண்ணீர் திறப்பு, விவசாயிகள் வரவேற்பு, பயம் கலந்த மகிழ்ச்சியென தெரிவிப்பு

ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பதை வரவேற்பதாகவும், ஆனால் இந்த அறிவிப்பு பயம் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக டெல்டா விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

HIGHLIGHTS

ஜூன்-12 ல் தண்ணீர் திறப்பு, விவசாயிகள் வரவேற்பு, பயம் கலந்த மகிழ்ச்சியென தெரிவிப்பு
X

ஜூன் -12  மேட்டூர் அணையில் நீர் திறப்பு என்று அரசு அறிவித்துள்ளது.இதற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக ஜூன் 2-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பு என்பது பயம் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் விவசாயிகள், குறுவை சாகுபடியை சிறப்பாக செய்ய வேண்டும் என்றால் நிபந்தனைகளின்றி அனைத்து வங்கிகளிலும் விவசாய கடன் வழங்க வேண்டும் .

மேலும் கொரோனா காலத்தில் சிறு குறு விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே கால தாமதம் ஏற்படுத்தாமல் கடன் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாவட்டம் முழுவதும் உரத்தட்டுப்பாடு, விதைநெல் தட்டுப்பாடுகள் அதிக அளவில் இருப்பதாகவும், எனவே உடனடியாக அதைப் போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

தற்போது தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அதனை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும் அப்போதுதான் கடைமடை வரை தண்ணீர் சென்றடையும் என தெரிவித்துள்ளனர்.

Updated On: 3 Jun 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை