தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவராக பிரவேஷ்குமார் பொறுப்பேற்பு
தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவராக பிரவேஷ்குமார் பொறுப்பேற்றார்.
HIGHLIGHTS
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபேஷ் குமார் மீனா சென்னை சி.பி.சி.ஐ.டி., டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தருமபுரி எஸ்.பி.,யாக இருந்த பிரவேஷ்குமார் பதவி உயர்வு பெற்று, தஞ்சாவூர் டி.ஐ.ஜி.,யாக பொறுப்பேற்றார்.
பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ஊரடங்கு நேரத்தில், தேவையின்றி சுற்றுபவர்களைப் பிடித்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோல, தஞ்சாவூர் சரகத்தில் நாள்தோறும் 500 வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
காரைக்கால் எல்லையில் ஏற்கெனவே, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை இன்னும் முழுமையாகச் செயல்படுத்தி மதுபானம் கடத்தி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்றார்.