50 ஆண்டு கால ஆலமரத்தை வேரோடு சாய்த்தற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்
சாலை விரிவாக்கப் பணிக்காக 50 ஆண்டு கால ஆலமரத்தை வேரோடு நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்தியதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு சாலைகளில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் 8 கிலோமீட்டர் நீளமுள்ள தஞ்சை - வல்லம் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரங்களில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை அருகே உள்ள சிந்தாமணி குடியிருப்பு பகுதியில் உள்ள சுமார் 50 ஆண்டு கால ஆலமரத்தை வேரோடு நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்தியுள்ளனர். இதில் அருகில் இருந்த பேருந்து நிலையமும் சேதமடைந்துள்ளது.
தற்போது உள்ள நவீன இயந்திரங்கள் உதவியுடன் மரத்தை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தியிருக்கலாம், ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அதனை செய்யாமல், பசுமையாக உள்ள மரத்தை வேரோடு சாய்த்ததற்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.