/* */

தஞ்சை அருகே துலுக்கம்பட்டியில் ஆயுதங்களுடன் நின்றிருந்த 6 பேர் கைது

தஞ்சை அருகே துலுக்கம்பட்டியில் ஆயுதங்களுடன் நின்றிருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தஞ்சை அருகே துலுக்கம்பட்டியில் ஆயுதங்களுடன் நின்றிருந்த 6 பேர் கைது
X

தஞ்சை அருகே துலுக்கம்பட்டி பிரிவு சாலை பகுதியில் 6 பேர் ஆயுதங்களுடன் நின்றிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீஸ் இன்ஸ்பெக்டர்( பொறுப்பு) கார்த்திகேயன் மற்றும் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 2 அரிவாள், கத்தி மற்றும் உருட்டுக்கட்டையுடன் நின்றிருந்த ஆறு பேரை சுற்றி வளைத்தனர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் தஞ்சை நாஞ்சிக்கோட்டை இ.பி. காலனி ஆறுமுகம் என்பவரின் மகன் மணிகண்டன் (25), செபாஸ்டியன் மகன் பிரின்ஸ்லாரா (27), ஜீவா (23) சென்னை பாண்டியன் நகரை சேர்ந்த கேசவன் மகன் வெங்கட் (27), மாதாக்கோட்டை கலியன் மகன் அஜித் செல்வம் (21), கும்பகோணம் பாஸ்கரன் மகன் ராஜேஸ்கண்ணன் (21) என்பது தெரிய வந்தது. இதில் சிலர் மீது பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

Updated On: 4 April 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்