/* */

தாயை கவனிக்காத மகன்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு

பெற்ற தாயை கவனிக்காமல் தவிக்க விட்ட மகன்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்

HIGHLIGHTS

தாயை கவனிக்காத மகன்கள் மீது  போலீஸார் வழக்கு பதிவு
X

பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாயை மீட்ட தஞ்சாவூர் சமூக நலத்துறை அலுவலர்கள்

தஞ்சாவூரில், பெற்ற தாயை பராமரிக்காமல் வீட்டுக்குள் பூட்டி வைத்த இரண்டு மகன்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர், காவிரி நகர், 5வது தெருவைச் சேர்ந்தவர் ஞானஜோதி( 62 ). இவரசு கணவர் திருஞானம் துார்தர்ஷனில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த , 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஞானஜோதியின் மூத்த மகன் சண்முகசுந்தரம், சென்னையில் போலீஸ் தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டராகவும், இளைய மகன் வெங்கடேசன் துார்தர்ஷன் சேனலிலும் பணியாற்றி வருகின்றனர்.

சொத்து பிரச்னை காரணமாக, இரண்டு மகன்களும் ஞானஜோதியை ஒரு வீட்டில் வைத்து பூட்டியிருந்தனர். போதிய உணவு, தண்ணீர் இல்லாமல், எலும்பும், தோலுமாக மாறிய ஞானஜோதி, வீட்டுக்குள் தரையை சுரண்டி மண்ணை தின்று பசியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் புகார் அனுப்பினார். இதையடுத்து, 14ம் தேதி இரவு சமூக நலத்துறை அலுவலர்கள், ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா ஆகியோர், ஞான ஜோதியை மீட்டனர். இது தொடர்பாக நேற்றுமுன்தினம் தமிழ் பல்கலைகழக போலீசில், விமலா புகார் அளித்தார். இதன் பேரில், மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ், பெற்ற தாயினை பராமரிக்காமல் இருந்த இரண்டு மகன்களின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 16 April 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்