Begin typing your search above and press return to search.
கும்பகோணத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கையாடல்: ஊழியர் கைது
கும்பகோணத்தில் வாடிக்கையாளர்கள் செலுத்திய தவணை பணத்தை கையாடல் செய்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வாடிக்கையாளர்கள் செலுத்திய தவணை பணத்தை கையாடல் செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் இளைஞரை தஞ்சை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் டிவிஎஸ் கிரெடிட் லிமிடெட் டிரினிட்டி கலெக்சன் மேலாளராக பணிபுரிபவர் செந்தில்குமார் (44). இவர் தஞ்சை குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்திருந்தார்.
அதில் மேற்கண்ட நிறுவனத்தில் பணிபுரிந்த கும்பகோணம் கருடாலயா தெருவை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சத்தியமூர்த்தி (39) என்பவர் வாடிக்கையாளர்கள் செலுத்திய தவணைத் தொகை பணத்தில் ரூ.5,16,928 ஐ மோசடி செய்துள்ளார் என்று தெரிவித்து இருந்தார்.
இதன் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஞானசுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சத்தியமூர்த்தியை கைது செய்துள்ளனர்.