Begin typing your search above and press return to search.
காரில் கஞ்சா கடத்தல்: தஞ்சை அருகே 5 பேர் கைது
ஆந்திராவில் இருந்து நாகைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 60 கிலோ கஞ்சா, தஞ்சை வல்லம் அருகே பறிமுதல் செய்யப்பட்டது.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுப்பதற்காக காவல்துறை தனிப்படையினர், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வல்லம் புதூர் பிரிவு சாலை அருகே, காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, காரில் இருந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்ததில், ஆந்திராவில் இருந்து நாகை மாவட்டத்திற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இது தொடர்பாக, நாகை மாவட்டத்தை சேர்ந்த அன்புச்செல்வன், ஈரோட்டைச் சேர்ந்த கௌதம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சேர்ந்த ரவிக்குமார், சந்திரதோரா, அப்பாவு ஆகிய 5 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து காரையும் 60 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.