/* */

காரில் கஞ்சா கடத்தல்: தஞ்சை அருகே 5 பேர் கைது

ஆந்திராவில் இருந்து நாகைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 60 கிலோ கஞ்சா, தஞ்சை வல்லம் அருகே பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

காரில் கஞ்சா கடத்தல்: தஞ்சை அருகே 5 பேர் கைது
X

நாகைக்கு காரில் கஞ்சா கடத்திய வழக்கில், தஞ்சை அருகே கைதான ஐந்து பேர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுப்பதற்காக காவல்துறை தனிப்படையினர், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வல்லம் புதூர் பிரிவு சாலை அருகே, காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, காரில் இருந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்ததில், ஆந்திராவில் இருந்து நாகை மாவட்டத்திற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இது தொடர்பாக, நாகை மாவட்டத்தை சேர்ந்த அன்புச்செல்வன், ஈரோட்டைச் சேர்ந்த கௌதம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சேர்ந்த ரவிக்குமார், சந்திரதோரா, அப்பாவு ஆகிய 5 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து காரையும் 60 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 11 Sep 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...