தேர் விபத்து தொடர்பாக அமைக்கப்பட்ட தனி நபர் குழுவிசாரணை தொடக்கம்
தேர்விபத்து குறித்து விரைவில் தமிழக அரசிடம் 2 அறிக்கைகள் சமர்பிக்கவுள்ளதாக வருவாய் துறை செயலாளர் குமார்ஜெயந்த் பேட்டி
HIGHLIGHTS
இதில் மின்துறை, நெடுஞ்சாலை துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிதுறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மருத்துவர்கள் குழு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். ஒவ்வொரு துறை அதிகாரிகளிடமும் விபத்து குறித்த தகவல்களை முதன்மைச் செயலாளர் கேட்டறிந்தார். பின்னர் விபத்து நடைபெற்ற பகுதிகளில் ஆய்வு செய்தார். மேலும் விழாக்குழு, கமிட்டியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் வழங்கி முழு விசாரணை நடைபெற இருக்கிறது.
பின்னர் குமார்ஜெயந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இரண்டு நாட்கள் முழுமையாக விசாரணை செய்ய உள்ளோம். மக்கள் தன்னை நேரில் சந்தித்து விபத்து குறித்து தகவல் தெரிவிக்கலாம்.விரைவில் இந்த விபத்து குறித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம். முதல் அறிக்கையில், இந்த விபத்து எப்படி நடந்தது என்றும், இரண்டாவது அறிக்கையில் இனிமேல் விபத்து நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமர்ப்பிபோம் என்றார் அவர்.