லவ்பேர்ட்ஸ் கூண்டில் உணவுக்காக குஞ்சுகளை விழுங்கிய பாம்பு பிடிபட்டது
தஞ்சை நகரில் லல்பேர்ட்ஸ் குருவிகள் வளர்த்த கூண்டில் புகுந்த பாம்பு நான்கு குஞ்சுகளை விழுங்கியதால் பறவை வளர்ப்போர் அதிர்ச்சி
HIGHLIGHTS
லவ் பேர்ட்ஸ் பறவைகள் வளர்த்து வந்த கூண்டில் உணவைத்தேடி வந்த பாம்பை லாவகமாகப் பிடித்த அருகானூயிர் காப்பு குழுவினர்.
தஞ்சை மாவட்டத்தில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வரக்கூடிய ஆபத்தான விலங்குகள் மற்றும் பாம்புகள் பற்றி தகவல் அறிந்தவுடன் தஞ்சை மையமாகக் கொண்டு செயல்படும் டாக்டர் சதீஷ் தலைமையிலான அருகானூயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை சேர்ந்த தன்னார்வலர்கள் அவற்றைப் பிடித்து சென்று உடனடியாக வனப்பகுதியில் விட்டு வருகின்றனர்.
தற்போது வரை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்த குழுவினர் இன்று தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை சுந்தரம் நகர் பகுதியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை ஏற்று சென்றபோது நூற்றுக்கணக்கான லவ் பேர்ட்ஸ் பறவைகள் அடைக்கப்பட்டிருக்கும் பறவைகள் கூண்டுக்குள் சென்ற ஒரு நல்ல பாம்பு பறவை குஞ்சுகளை விழுங்கியதைப் பார்த்த குழுவினர் கூண்டுக்குள் சென்று பொறி வைத்து சுமார் 20 நிமிடம் போராடி பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அந்த பாம்பை பிடித்தனர். அதனை அடர்ந்த வனப்பகுதியில் சென்று விட்டனர் கூண்டுக்குள் இருந்த அந்த பாம்பு 4 குருவி குஞ்சுகளை சாப்பிட்டு இருப்பது தெரியவந்தது.அருகானூயிர் காப்பு குழுவை சேர்ந்த 4 பேர் போராடி இந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.