Begin typing your search above and press return to search.
கரும்புடன் விவசாயிகள் போராட்டம்
கரும்புக்கு உரிய விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சாவூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு வெட்டிய கரும்புக்கு 25 கோடி ரூபாய் வழங்காததை கண்டித்தும் கரும்பு, டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குருங்குளத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.