/* */

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

தஞ்சையில் கலெக்டர் தலைமையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்
X

தஞ்சாவூரில் குறைதீர்க்கும் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட கடந்த பட்ஜெட்டில் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி இருப்பதை கண்டித்தும், மேகதாட்டில் அணைக்கட்ட கண்டனம் தெரிவித்து ஏற்றப்பட்ட தமிழக அரசின் கண்டன தீர்மானத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய கர்நாடகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கர்நாடக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிய கர்நாடக அரசு அதைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், மத்திய கர்நாடக அரசின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தமிழக விவசாயிகள் கூட்டு இயக்க சங்கத்தினர் மண்பானையில் காவிரிநீர் என எழுதி அதனை தரையில் போட்டு உடைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 25 March 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்