/* */

அதிகாரிகள் அலட்சியம் - ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் சேதம்.

வளம்பக்குடி கிராமத்தில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் அதிகாரிகள் அலட்சியத்தால் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் சேதம்

HIGHLIGHTS

அதிகாரிகள் அலட்சியம் - ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் சேதம்.
X

மழையில் நனைந்து வீணான நெல் மூட்டைகள்

தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி கிராமத்தில் அரசு திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. கடந்த ஆண்டு 2021-22 குறுவை அறுவடை பருவத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் இந்த சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டன.

பின்னர் இங்கு இருந்து லாரிகள் மூலம் நெல் மூட்டைகள் தனியார் மற்றும் அரசு ஆலைகளுக்கு அரவைக்கு கொண்டு செல்லப்படும். மேலும் ரயில் வேகன் மூலம் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் ஒரு ஆண்டு கடந்தும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதால் நெல் மூட்டைகளை எலி கடித்து புழுக்கள் வைத்து சேதம் அடைந்து உள்ளன.

மேலும் தொடர்ந்து வெயில், மழை, பனி என கிடப்பதால் நெல்மணிகள் அழுகி போய்வுள்ளன. பல கோடி ரூபாய் பணம் கொடுத்து விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல் வீணாகி போவதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Updated On: 9 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!