/* */

தஞ்சை அருகே நிலத்தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் கைது

தஞ்சை அருகே நிலத்தகராறு தொடர்பாக தம்பி மற்றும் அவரது மனைவியை தாக்கிய அண்ணன், அவரது மகனை போலீசார் கைது செய்து விசாரணை.

HIGHLIGHTS

தஞ்சை அருகே நிலத்தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் கைது
X

தஞ்சை அருகே நிலத்தகராறு தொடர்பாக தம்பி மற்றும் அவரது மனைவியை தாக்கிய அண்ணன் மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை அருகே குருங்குளம் நாகப்ப உடையான்பட்டி நடுத்தெருவை சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் இளங்கோவன் (45). இவரது மனைவி சசிகலா. இளங்கோவனின் அண்ணன் சிவசங்கரன் (52). இவரது மகன் வீரமணி.

அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது இந்நிலையில் சம்பவத்தன்று சிவசங்கரன், வீரமணி இருவரும் சேர்ந்து இளங்கோவன் மற்றும் அவரது மனைவியிடம் தகராறு செய்து கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Updated On: 6 Jan 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!