கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான போராட்டத்துக்கு பாஜக காரணம்: பி.ஆர். பாண்டியன்
பா.ஜ.க சார்பில் தஞ்சையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக போராட்டத்தை தூண்டியுள்ளது
HIGHLIGHTS
தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பி.ஆர். பாண்டியன் அளித்த பேட்டியில், கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் பாஜக நேற்றைய தினம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது என்பது போலி நாடகம். இதன் காரணமாக கர்நாடக விவசாயிகளை போராட்டத்திற்கு தூண்டியுள்ளது. , மேக்கேதாட்டு அணை பிரச்னையில் விவசாயிகளுக்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும் பிரிவினையை தூண்ட நினைக்கும், தமிழக பாஜக வின் கனவு நிறைவேறாது. நிச்சயம் மண்ணை கவ்வுவார்கள்.
தஞ்சை உண்ணாவிரதம் போலி நாடகம். மேக்கேதாட்டுவில் அணைகட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி, மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், பிரதமரை கண்டித்து போராட்டம் நடத்தாமல் கர்நாடக அரசை கண்டிப்பது தேவையற்றது . தமிழக விவசாயிகள், அரசியல் கட்சியினர் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் என்பது அரசியல் முதிர்ச்சியற்றது. அண்ணாமலை தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தது உள்நோக்கம் உடையது, சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த ஐபிஎஸ் தேர்வு எழுதியவர்கள் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அண்ணாமலை ஏன் ராஜினாமா செய்தார் என்பதனை விளக்க வேண்டும் என்றார் பி.ஆர்.பாண்டியன்,.