தஞ்சாவூர் பெரியகோயிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமம், இனிப்பு அலங்காரத்துடன் தொடங்கியது.
பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
தஞ்சாவூர் பெரியகோயிலிலுள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். அதன்படி நிகழாண்டு ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 10 -ம் தேதி மஞ்சள் அலங்காரமும், 11 -ம் தேதி குங்கும அலங்காரமும், 12 -ம் தேதி சந்தன அலங்காரமும், 13 -ம் தேதி தேங்காய்பூ அலங்காரமும், 14 -ம் தேதி மாதுளை அலங்காரமும், 15 -ம் தேதி நவதானிய அலங்காரமும், 16 -ம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 17 -ம் தேதி கனி அலங்காரமும், 18 -ம் தேதி காய்கனி அலங்காரமும் நடைபெறவுள்ளன. நிறைவு நாளான 19 -ம் தேதி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு கோயிலுக்குள் புறப்பாடும் நடைபெறுகிறது.