/* */

ஆதார் அட்டையை ஆட்சியரிடம் ஒப்படைத்து போராட்டம்

ஆதார் அட்டையை ஆட்சியரிடம் ஒப்படைத்து போராட்டம்
X

தஞ்சாவூரில் பதினைந்து ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யாததை கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்சார வாரியத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை இதுவரை பணி நிரந்தரம் செய்யாததை கண்டித்தும், பல முறை கோரிக்கை வைத்தும், மின்சார துறை அமைச்சரிடம் தொடர்ந்து மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காமல் தொழிலாளர்களை ஏமாற்றுவதாக தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டமும், தங்களுடைய வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழக அரசு இன்னமும் தங்களை பணி நிரந்தரம் செய்யாவிட்டால் தமிழகத்தை விட்டு குடும்பத்துடன் வெளியேறும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 22 Feb 2021 10:00 AM GMT

Related News