Begin typing your search above and press return to search.
நாஞ்சிக்கோட்டை ஜல்லிக்கட்டில் பங்கேற்க தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்
நாஞ்சிக்கோட்டையில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி உதவி கலெக்டர் சுகபுத்ரா ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
தஞ்சை அருகே உள்ள நாஞ்சிக்கோட்டையில் உள்ள வீரமுனியாண்டவர் கோயிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு, நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தஞ்சை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 650க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை போட்டி நடைபெறுவதையொட்டி அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து உதவி ஆட்சியர் சுகபுத்ரா ஆய்வு செய்தார்.