/* */

புயல் எச்சரிக்கை: பட்டுக்கோட்டை பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

புயல் எச்சரிக்கை: பட்டுக்கோட்டை  பகுதி மீனவர்கள்  கடலுக்கு செல்லவில்லை
X

புயல் எச்சரிக்கை காரணமாக பட்டுக்கோட்டை பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

புயல் எச்சரிக்கை காரணமாக பட்டுக்கோட்டை கடல் பகுதி மீனவர்கள் ஐந்தாவது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

தஞ்சை மாவட்டத்தில் தம்பிக்கோட்டை மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கு மேற்பட்ட விசைப்படகுகள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது புயல் எச்சரிக்கை விடப்பட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால், இன்று ஐந்தாவது நாட்களாக பட்டுக்கோட்டை கடற்பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகப் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். ஐந்து நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் ஏற்றுமதி மற்றும் உள்ளூர் மீன் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 7 March 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!