/* */

கும்பகோணம் நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் உதய கருட சேவை

108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் ஒன்றாக நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் உதய கருட சேவை நடந்தது

HIGHLIGHTS

கும்பகோணம் நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் உதய கருட சேவை
X

 கும்பகோணம் அருகே நாதன்கோவில் கிராமத்தில் உள்ள ஜெகநாதபெருமாள் கோவில்

108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் ஒன்றாக கும்பகோணம் அருகே நாதன்கோவில் கிராமத்தில் உள்ள ஜெகநாதபெருமாள் கோவில் உள்ளது. இங்கு பெருமாள் செண்பகவல்லி தாயாருடன் அருள்பாலித்து வருகிறார். பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை நாளில் உதய கருடசேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தை அமாவாசையை முன்னிட்டு உதய கருடசேவை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி ஜெகநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

கருட சேவை உற்சவத்தையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து கோபூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து சாமி வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 2 Feb 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்