கும்பகோணம் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி பலி
கும்பகோணம் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி பலியாகினர்.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமு, இவரது மனைவி மீனா, இவர்களின் மருமகன் ரமேஷ், மூவரும் கும்பகோணத்தில் உள்ள ஹோட்டலில் சமையல் செய்வதற்காக, ஒரே டூவீலரில், இன்று காலை சென்றனர்.
டூவீலரை ரமேஷ் ஓட்டிச் சென்ற நிலையில், கும்பகோணம் கள்ளப்புலியூர் அருகே சென்றபோது, கும்பகோணத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் டூவீலர் மீது மோதியது.
இதில் விபத்தில் சம்பவ இடத்திலேயே சோமு அவரது மனைவி மீனா ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இதில் ரமேஷ் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் தாலுகா போலீசார், இறந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் காயமடைந்த ரமேஷ்யும் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கார் ஓட்டுனர் கோபிநாத்தை கைது செய்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.