/* */

அரசு போக்குவரத்து ஊழியர் சிஐடியு சம்மேளனம் சார்பில் உண்ணாவிரதம்

அரசு போக்குவரத்து ஊழியர் சிஐடியு சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

அரசு போக்குவரத்து ஊழியர் சிஐடியு சம்மேளனம்  சார்பில் உண்ணாவிரதம்
X

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வாயில் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சிஐடியு சார்பில் தமிழக அரசு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்கி பிரச்சனைகளை தீர்க்க முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது.

உண்ணாவிரதத்திற்கு மத்திய போக்குவரத்து சங்கம் துணைத்தலைவர் அழகிரிசாமி தலைமை வகித்தார். விரைவு போக்குவரத்து மத்திய சங்க துணை தலைவர் கண்ணன் துவக்க உரையாற்றினார். மத்திய போக்குவரத்து சங்க தலைவர் மணிமாறன், பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் வெங்கடாஜலபதி ஆகியோர் விளக்க உரையாற்றினர். தஞ்சை மாவட்ட சிஐடியு செயலாளர் ஜெயபால் நிறைவுரையாற்றினார்.

போக்குவரத்துக் கழகங்களின் பற்றாக்குறையை ஈடுகட்ட வரவுக்கும் செலவிற்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வழங்க வேண்டும். ஊதிய பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். ஓய்வு பெற்றோர் பணப்பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவக்காப்பீடு அமல்படுத்த வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 23 Nov 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்