/* */

கும்பகோணத்தில் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டாஸ்

கும்பகோணத்தில் கொலை வழக்கில் கைதான 3 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டாஸ்
X

கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் மகள்களுடன், பிரவுசின் செண்டர் நடத்தி வந்த கார்த்திக் பழகி வந்துள்ளார். இவர்களிடையே பண பரிமாற்றம் இருந்து வந்துள்ளது. கடந்த அக்டோபர் 12ஆம் தேதி, தம்பதியின் மகள்கள், பிரவுசிங் செண்டர் சென்று, வீடு திரும்பவில்லை.

இதனால், திருப்பனந்தாள் காவல் நிலையத்தில், பெற்றோர் புகார் கொடுத்திருந்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்ததில் தம்பதியின் மகள்கள் இருவரில் ஒருவரிடம் கார்த்திக் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை செய்து வந்ததும், தர மறுத்ததால், அவரை கார்த்திக் அடித்து கொன்றதும் தெரிய வந்தது. அவரது உடலை, குமரன்குடி சுடுகாட்டில் உள்ள கருவக்காட்டில் புதைத்து விட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக, கார்த்திக் (36), அவரது மனைவி சத்யா (32), மாமனார் பொன்னுசாமி (63), சத்யாவின் சகோதரர் சரவணன் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் கார்த்திக், பொன்னுசாமி, சரவணன் ஆகியோர் மீது மாவட்ட எஸ்பி ரவளிபிரியா பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி குண்டர் சட்டம் பதிந்து, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 22 Dec 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...