/* */

கும்பகோணத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான பைரவர் கற்சிலை கண்டுபிடிப்பு

கும்பகோணம் அருகே ஏரிநத்தம் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான பைரவர் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

கும்பகோணத்தை அடுத்த துக்காச்சி ஊராட்சி, ஏரிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவருக்கு அதே பகுதியில் வயல்கள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை அவரது வயலின் அருகில் உள்ள சிறிய குட்டையில் மண்ணை எடுத்து, கரையை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிறிய குட்டையில் உள்ள மண்ணை அகற்றும் போது, சுமார் 1000 ஆண்டுகள் பழமையான 4 அடி உயரமுள்ள கல்லினாலான பைரவர் சிலை கிடைத்தது.

இதனையடுத்து அருண்குமார் ஊராட்சி மன்றத்தலைவர் சசிகலா சரவணனிடம் தெரிவித்தார். பின்னர் வருவாய் ஆய்வாளர் ரமாபிரபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பைரவர் கற்சிலையை கும்பகோணம் தாலுக்கா அலுவலகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு, தாசில்தார் கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது.



Updated On: 27 July 2021 9:40 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!