/* */

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்ஸ் துவக்க விழா

கும்பகோணத்தில் கிஸ்வா சார்பில் ரூ 9 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்ஸ் துவக்க விழாவை எம்எல்ஏ அன்பழகன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்ஸ் துவக்க விழா
X

கும்பகோணம் கிஸ்வா சார்பில் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது.  

கிஸ்வா சார்பில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா கும்பகோணத்தில் நடைபெற்றது. விழாவில் கிஸ்வா சார்பில் ரூ 9 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்ஸ் துவக்க விழாவை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் தொடங்கி வைத்தார். விழாவிற்கு கிஸ்வா தலைவர், எம்எஸ்எம்.ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். சாசன தலைவர் எம். முகமது ஜியாவுதீன் வரவேற்றார். சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு குறித்து வழக்கறிஞர் உத்திராபதி சிறப்புரை ஆற்றினார். திட்டத் தலைவர் இன்ஜினியர் எம்.என் முகம்மது ரபி திட்ட உரையாற்றினார். அனைத்து சமுதாய மக்களுக்காக பிரசவம், விபத்து, இயற்கை பேரீடர், அவசர சிகிச்சை என கும்பகோணம் சுற்றுபுறவாசிகளுக்கு எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் ஆம்புலன்ஸ் வாகனத்தை தொடங்கி வைத்தார். விழாவில் அன்னை கல்வி குழுமம் தலைவர் அன்வர் கபீர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஷாஜகான், ஆம்புலன்ஸ் சேவை திட்ட இயக்குனர் ஜாகிர் உசேன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Aug 2021 1:25 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்