/* */

ஐந்து வைணவ தலங்களில் மாசி மக கொடியேற்றம்

ஐந்து வைணவ தலங்களில் மாசி மக கொடியேற்றம்
X

மாசி மக பிரமோற்சவத்தை முன்னிட்டு கும்பகோணம் சக்ரபாணிசுவாமி, ஆதிவராகப் பெருமாள், ராஜகோபால் சுவாமி உள்ளிட்ட ஐந்து திருக்கோவில்களில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஆண்டு தோறும் 12 சைவ திருத்தலங்கள் மற்றும் 5 வைணவ ஸ்தலங்களுடன் இணைந்து ஒருசேர பத்து நாள் விழா நடைபெறும் மாசி மக பிரமோற்சம் மிகவும் விசேஷமானது. இந்த ஆண்டிற்கான மாசி மக பிரமோற்சவத்தின் துவக்கமாக நேற்று ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர் கௌதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் காளஹஸ்தீஸ்வரர் என ஆறு சைவ திருத்தலங்களில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

இதனையடுத்து, இன்று வைணவ ஸ்தலமான கும்பகோணம் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் உற்சவர் சக்ரபாணிசுவாமி, விஜயவள்ளி தாயார் மற்றும் சுதர்சனவள்ளி தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருளி, பட்டாசாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேள,தாள மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, ஸ்ரீ பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற திருக்கொடி தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டு அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதே போன்று இராஜகோபாலசுவாமி திருக்கோயில் மற்றும் ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில் ஆகிய வைணவ தலங்களிலும் மாசிமக பிரமோற்சவ கொடியேற்றம் இன்று சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 18 Feb 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!