/* */

சங்கரன்கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பொன்ராஜ் என்ற இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு
X

வாகன விபத்தில் உயிரிழந்த இளைஞர் பொன்ராஜ்.

புளியங்குடி டிஎன் புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை மகன் பொன்ராஜ் 26. இவர் புளியங்குடியில் உள்ள ஒரு மொபைல் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது பள்ளிவாசல் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் பொன்ராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் பொன்ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறியதை தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

ஆனால் செல்லும் வழியிலேயே பொன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமான 6 மாதத்தில் வாலிபர் உயிரிழந்தது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 12 Feb 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  3. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  4. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  5. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  6. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  7. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  8. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  9. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  10. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...