Begin typing your search above and press return to search.
சிவகிரியில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது
தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் எல்லைக்குட்பட்ட பஜார் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அங்கு விரைந்த காவல்துறையினர் அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சிவகிரியை சேர்ந்த ரோஸ் துரை என்பவரின் மகன் பிரின்ஸ் ஜோசப் (32) என்ற நபர் மீது சிவகிரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.