திமுக சார்பில் கோடை காலத்திற்கு நீர் மோர் பந்தல்
தமிழகம் முழுவதும் காலை முதல் மாலை வரை பொதுமக்களை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் மக்களின் தாகத்தை தீர்க்கின்ற வகையிலும், பரவி வரும் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையிலும், தமிழகத்தின் பல இடங்களில் நீர் மோர் பந்தல் மற்றும் நோய்களை கட்டுபடுத்த கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பாவூர்சத்திரம் பேரூந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் கபசுர குடிநீர், தர்பூசணி பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் பொது மக்களுக்கு நீர்மோர் மற்றும் கபசுர குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் கீழ்ப்பாவூர் ஒன்றிய செயலாளர் சீனித்துரை, மாவட்ட மகளிரணி வைத்தீஸ்வரி, யோவான், கபில் சுரேஸ், உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.